Saturday 26 May 2018

உங்கள் நினைவுத்திறனை அதிகரிக்க வேண்டுமா ?

நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்:


* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.


* புரியாமல் எதையும் படிக்க கூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.


* முழு கவனம் மிக அவசியம்.


* mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்.


உதாரணம்: news – north, east, west, south


* படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.


* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்


* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.


* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும்.


* தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.


* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.


Friday 25 May 2018

உங்கள் குழந்தை ஆங்கிலத்தில் பேச தயக்கமா ?


1. குழந்தைகள் ஆங்கிலத்திலேயே வாக்கியங்களை அமைத்து பேசுவது தொடக்க நிலையில், சிரமமான ஒன்று. அதனால், அவர்கள் தமிழில் பேசுகின்ற வாக்கியங்களுக்கு, இணையான ஆங்கில வாக்கியங்களைப் பேசப் பழக்குங்கள்.


உதாரணமாக: "அம்மா! இங்கே வா!" என்பதை "Mother come here" என்று சொல்ல வைக்கலாம்.


2. வீட்டில் பேசும்போது, சின்னச் சின்ன வாக்கியங்களைப் பேச பழக்கப்படுத்துங்கள். காலையில் டிபன் சாப்பிடும்போது, உங்கள் மகன்/மகள் பூரியை விரும்பி சாப்பிடுகிறார் என்றால், I like puri.. என்று சொல்ல வைத்து, 'நீ எதையெல்லாம் விரும்புகிறாயோ அதையெல்லாம் 'பூரி' என்ற சொல்லை எடுத்துவிட்டு பேசு' எனச் சொல்லுங்கள். ஏதேனும் தவறாக சொன்னால் மாற்றிச் சொல்லப் பழக்குங்கள்.


3.காலையில் எழுந்ததும் 'Good morning' என்று வீட்டில் உள்ள அனைவருக்கும் சொல்வதை வழக்கமாக்குங்கள். நீங்கள் சொல்வதைப் பார்க்கும் பிள்ளைகள் அதேபோல பேசத் தொடங்குவார்கள். பிறகு, Have a nice day" போன்ற வாழ்த்துகளும், பிறந்த நாள் வீட்டுக்குச் செல்லும்போது ஆங்கிலத்தில் வாழ்த்துகள் சொல்ல, வீட்டிலேயே சின்னதாக ஒத்திகைப் பார்த்துவிட்டுச் செல்லலாம். உங்கள் அலுவலகத்தில் ஏதேனும் முக்கியமான மீட்டிங்க்கில் கலந்துகொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை உங்கள் பிள்ளையிடம் கூறி, ஆங்கிலத்தில் வாழ்த்தச் சொல்லுங்கள்.


4. கேள்விக்கு பதில் சொல்வது என்பதை மாற்றி, பதிலை நீங்கள் கூறி இதற்கு என்ன கேள்வி கேட்கப்பட்டிருக்கும் என யூகிக்கச் செய்யுங்கள். அதையும் எளிமையான உதாரணங்களிலிருந்தே தொடங்குங்கள்.

"I am 40 years old" என்ற பதிலை இன்று நான் ஒருவரிடம் சொன்னேன். அப்படியென்றால் என்னிடம் என்ன கேட்டிருப்பார்கள் எனக் கேட்கலாம்.


5. பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்லும்போது அங்கு பார்க்கும் பொருட்களுக்கான ஆங்கிலப் பெயர்களைக் கூறுங்கள். காய்கறி கடைக்குச் சென்றால் ஒவ்வொரு காய்கறியின் ஆங்கிலப் பெயரையும் சொல்லுங்கள். வீடு திரும்பும்போது என்னவெல்லாம் வாங்கினோம் என்பதை செக் பண்ணும் விதமாக, காய்கறியின் பெயரை நீங்கள் தமிழில் சொல்ல, பிள்ளை ஆங்கிலத்தில் சொல்லுமாறு விளையாட்டைப் போல செய்யுங்கள். இது அவர்களின் ஆங்கிலச் சொல் வங்கியை அதிகரிக்கும். ஆங்கிலத்தில் பேசுவதற்கு இது மிகவும் முக்கியம்.


6. பிள்ளைகளின் பழக்கங்களை வைத்து ஒரு பட்டியல் தயாரிக்கலாம். தன்னால் எதெல்லாம் முடியும் என்பதை சொல்ல வைக்கலாம்.


I can ..........


பிள்ளைகள் தங்களால் முடியும் என நினைக்கிற விஷயங்களால் நிரப்ப வேண்டும்.


7. இரவில் தூங்கும்முன் கதைகள் கேட்கும் பழக்கம் பல குழந்தைகளுக்கும் இருக்கும். அந்த நேரத்தில், ஆங்கிலத்தில் Bed time stories சொல்லலாம். கதையின் வழியாக ஆங்கிலச் சொற்களைக் கேட்கும்போது, அதற்கான அர்த்தங்களை எளிதாக புரிந்துகொள்வார்கள். உரையாடும் தன்மையும் அதிகரிக்கும்.


8. Bed time stories கேட்டுப் பழகிய குழந்தைகளுக்கு சின்னச் சின்ன கதைகள் கொண்ட புத்தகங்களைப் படிக்க வைக்கலாம். இது வாசிப்பு பழக்கத்தையும் அதிகரிக்கும். நீங்களும் அந்தக் கதையைப் படித்து, கதையில் இருக்கும் கதாபாத்திரங்களாக பேசிப் பழகலாம். உதாரணமாக... கதையில் யானை காட்டுக்குள் தன் குட்டியைத் தேடி, பல விலங்குகளிடம் கேட்டுக் கண்டுபிடிக்கும் கதை எனக் கொண்டால், யானையாக உங்கள் பிள்ளையும் சந்திக்கும் விலங்குகளாக நீங்களும் உரையாடலாம்.


Wednesday 16 May 2018

தமிழக பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன.

கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கிய ப்ளஸ் 2 தேர்வுகள் ஏப்ரல் 6-ந் தேதி முடிவடைந்தது. இதனை தமிழ்நாடு, புதுச்சேரியில் தனித்தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 மாணவ, மாணவிகள் எழுதினார்கள். 


இதையடுத்து, விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்தன. பின்னர், மதிப்பெண்களை கம்ப்யூட்டர்களில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. தொடர்ந்து மதிப்பெண்கள் சரிபாக்கும் பணியும் நடைபெற்றது. எல்லாம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

www.dge.tn.nic.in, 


www.dge.tn.gov.in 


ஆகிய இணைத்தளங்களில் தேர்வு முடிவுகளை பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அல்லது மேற்கண்ட இணையதளங்களுக்கே சென்று தேர்வு முடிவினை அறிந்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 13 May 2018

HSC results publishing May 16

மே 16-இல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்



தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் புதன்கிழமை (மே 16) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளது.


  9 லட்சம் மாணவர்கள்: 


தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் ஏப். 6-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை 6 ஆயிரத்து 903 மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ-மாணவியர், 40 ஆயிரத்து 686 தனித்தேர்வர்கள் என மொத்தம் 9 லட்சத்து 7, 620 பேர் எழுதினர்.  


பெற்றோர், மாணவர்களுக்கு... 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைப் போலவே மாணவர்கள் பதிவு செய்துள்ள செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப் படுத்தப்பட்ட பிளஸ் 2 மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது. 


ஆன்லைன் முறை ஏன்?

 அரசுத் தேர்வுத் துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்வு முடிவுகளை முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத் துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது. 


ஊடகவியலாளர்களுக்கு... 


தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள் அடங்கிய பகுப்பாய்வு அறிக்கை ஊடகவியலாளர்களுக்கு இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய முறையை இந்தாண்டு முதல் தேர்வுத் துறை அறிமுகப்படுத்தவுள்ளது.


Thursday 3 May 2018

மின் கட்டணத்திற்கு புதிய செயலி

மின் கட்டணம் செலுத்த புதிய செயலி அறிமுகம்



நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ அனைத்து விதமான கட்டணங்களையும் எளிதில் செலுத்த ‘பாரத் பில்பே’ என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த சேவையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வாயிலாக தமிழ்நாடு மின்சார வாரியம் கைகோர்த்து இருக்கிறது. 


இதன் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 2.79 கோடி பேர் மிக எளிமையான முறையில் தங்களுடைய மின்சார கட்டணத்தை செலுத்த முடியும்.கட்டணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் வகையில் பாரத் பில்பேயின் அடையாள முத்திரையுடன் கூடிய குறுஞ்செய்தி மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அச்சிடப்பட்ட ரசீது மூலமாகவோ தகவல் அனுப்பப்படும்.


இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதி இயக்குனர் மனோகரன் கூறுகையில், ‘பாரத் பில்பே மூலம் இனி மின்சார வாரியத்தின் வாடிக்கையாளர்கள் மிகவும் எளிமையான முறையில் தங்களுடைய மின்சார கட்டணத்தை பாதுகாப்பாக செலுத்த முடியும். 


இது அவர்களது நேரத்தையும், கட்டணம் செலுத்த மேற்கொள்ளும் போக்குவரத்துக்கான செலவையும் மிச்சப்படுத்த உதவும்’ என்றார்.

பள்ளி கல்வித்துறையின் 11 அதிரடி அறிவிப்பு

*மாணவர்களுக்கு 11 விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அதிரடியாக அறிவித்தது.*


மாணவர்கள் முறுக்கு மீசை, காதில் கடுக்கன் அணிவது கூடாது. பிறந்த நாளானாலும் சீருடையில்தான் வரவேண்டும்’ என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


கல்லூரி மாணவர்களை போலவே, மேல்நிலை பள்ளி மாணவர்களும் முறுக்கு மீசை, காதில் கடுக்கன், ‘லோ ஹிப்’ பேன்ட், சீரற்ற முறையில் முடிவளர்த்து பள்ளிகளுக்கு வர ஆரம்பித்தனர். மேலும், பள்ளி நிர்வாகங்களுக்கு தெரியாமல் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துகின்றனர். இதையடுத்து பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியர்கள் 11 விதிமுறைகளை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் இதனை கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


*கல்வித்துறையின் 11 விதிமுறைகள்:*


* காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வந்து சேர வேண்டும்.


* லோ ஹிப், டைட் பிட் ‘பேன்ட்’கள் அணிந்து வர அனுமதி இல்லை.


* அரைக்கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். சட்டையை இறுக்கமாக அணியக்கூடாது


* மாணவர்கள் அணியும் சட்டை நீளம் ‘டக் இன்’ செய்யும்போது வெளியில் வராத வகையில் இருக்க வேண்டும்.


* சீரற்ற முறையில் ‘இன்’ பண்ண கூடாது. கறுப்பு கலர் சிறிய ‘பக்கிள்’ கொண்ட பெல்ட் மட்டுமே அணிய வேண்டும்.


* கை, கால் நகங்கள், தலை முடி சரியான முறையில் வெட்டப்பட (போலீஸ் கட்டிங்) வேண்டும்.


* மேல் உதட்டை தாண்டாதவாறு மீசை இருப்பது அவசியம். முறுக்கு மீசை வைத்திருந்தால் கடும் நடவடிக்கை பாயும்.


* கைகளில் ரப்பர் பேண்டு, கயிறு, கம்மல், கடுக்கன், செயின் போன்றவற்றை அணிந்து வரக்கூடாது.


* பெற்றோர் கையொப்பத்துடன் வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுமுறை எடுக்க வேண்டும்.


* பைக், செல்போன், ஸ்மார்ட் போன் கொண்டு வர அனுமதி இல்லை. மீறினால் பறிமுதல் செய்யப்படும்.

திரும்ப ஒப்படைக்கப்பட மாட்டாது.


* பிறந்த நாள் என்றாலும் மாணவர்கள் சீருடையில் தான் பள்ளிக்கு வர வேண்டும்.


இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ‘மாணவர்களின் ஒழுக்க நெறிமுறைகளை வளர்த்தெடுப்பதில் பள்ளிகள் பெரும்பங்கு வகிக்கின்றன. இதற்கான 11 விதிமுறைகள் குறித்து ‘பிளக்ஸ் பேனர்’கள் பள்ளிகளில் வைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. துண்டு பிரசுரங்கள் மூலமும், பெற்றோரிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.